நோக்கினாள்
புன்னைத்தாள்
சட்டென சென்று
பட்டென கேட்டேன்
பாவை நீ யாரென
பண்பாக பேசினாள்
பணிவாக சொன்னாள்
உயர்ந்து பார்த்தேன்
நல்லவனாய்
கண்டேன் உன்னை
என்றுரைத்தால்
நாடி நாளங்களில்
ஓடுகின்ற
இரத்தமும்
உறைந்து போனது
இவள் சொல் கேட்டு
பார்ப்பவருக்கெல்லாம்
பயங்கரமாய்
இருந்த நான்
உன் கண்ணுக்கு
பண்பாலனாய்
விளங்கியது
யார் செய்த
அருளோ
ஆடியே போனேன்
கண்கள் பேசுவதை
கண்களாலே உணர்ந்தேன்
ஆனால்
வாய்கள் ஏனோ
மெளனித்து போனது
கல்லாய் இருந்த
என்னிதயத்தில்
எறும்பு ஊறுவது
போல
உணர்ந்தேன்
இதய துடிப்பிலும்
வித்தியாசம் கண்டோம்
இதயங்கள்
மாறியிருப்பதை
பின் விளங்கிகொண்டோம்
புது இதயமே
புத்துனர்வாய்
இருக்கிறது – அதனாலேயே
இந்த புது
உறவும் பூக்கிறது
என
மகிழ்ச்சி கொண்டோம்
இனம்புரியாத
உறவொன்று
உருவானதாய்
உணர்கின்றோம்- அதை
உரைப்பதட்கோ
வழியின்றி உருகுகின்றோம்
நம் காதலை
வாய் திறந்து சொல்லி
முறைப்படி கைபிடிக்க
முறையாகவே
முயல்கின்றேன்
NOTE :எனது கவிதையில் சீரழிந்த இந்த காதலர் தினத்தை ஆதரிப்பதாக இருந்ததை எனது நண்பர்கள் பலர் சுட்டிக்கட்டியதன் பின் அந்த கவிதையில் சில மாற்றங்களை செய்துள்ளேன் அத்துடன் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றியையும் அத்தவருக்காக உங்கள் அனைவரிடம் மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றேன்
3 comments:
காதலர் தினமா?.. அல்லது கழிசறை தினமா?. வீடியோ
http://vimeo.com/20745002
இனம்புரியாத
உறவொன்று
உருவானதாய்
உணர்கின்றோம்- அதை
உரைப்பதட்கோ
வழியின்றி உருகுகின்றோம்
கண்களால் சொல்லிக்கொண்ட
நம் காதலை
வாய் திறந்து சொல்லி
முறைப்படி கைபிடிக்க
முறையாகவே
முயல்கின்றேன்
Alagana warigal,,,atputhamana katpanai
இனம்புரியாத
உறவொன்று
உருவானதாய்
உணர்கின்றோம்- அதை
உரைப்பதட்கோ
வழியின்றி உருகுகின்றோம்
கண்களால் சொல்லிக்கொண்ட
நம் காதலை
வாய் திறந்து சொல்லி
முறைப்படி கைபிடிக்க
முறையாகவே
முயல்கின்றேன்
Alagana warigal...atputhamana katpanai valthukal
Post a Comment