முதலில் உலமாசபை ஷவ்வால் தலைபிறை விசயத்தில் பல தவறுகளையும் பொருத்தமற்ற அறிக்கைகளையும் வெளிப்படுத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அதேசமயம் இவ்வாறான தவறுகள் ஏற்கனவே பலவிடுத்தம் நிகழ்ந்துள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை எனவே எனது பதிவு இதுபற்றியது அல்ல
மாறாக இந்த முடிவை விமர்சிப்பவர்கள் பற்றியதே
உலமாசபை மக்களை பிழையாக வழிநடத்திவிட்டது என்று சூளுரைக்கும் பலர் தமது விமர்சனங்களும் வார்த்தைபிரயோகங்களும் இஸ்லாமிய மார்க்க வரையறைக்கு உட்பட்டிருக்கின்றதா என்று கவனிக்க மறந்துவிட்டனர் அத்துடன் பொய்யான கருத்துக்களை மக்களிடையே விதைத்து மக்களை திசைதிருப்ப பார்ப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்
உதாரனத்திட்கு ஒரு கருத்தை இங்கு பதிய வைக்கின்றேன்
பரவலாக பலரும் விமர்சிக்கும் ஒரு கருத்துதான் உலமாசபை தலைவரின் உரையில் பிறை 15 நிமிடம் தெரியும் என்றும் பின் தெரியாது என்றும் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார் என்று பலர் மிம்பர்களிலும் பேசியதை பார்க்ககூடியதாக இருந்தது
உலமாசபை தலைவரின் உரையில் அவர் தெளிவாக கூறுகின்றார் வானிலை அறிக்கையின் படி பிறை வானில் 15 நிமிடமே தெரியும் அனால் வெற்றுக்கண்ணால் பார்க்கவேண்டுமானால் அது 20 நிமிடம் இருக்கவேண்டும் என்று கூறினார் (இந்த கருத்து சரியா பிழையா என்பதில் எனக்கு உடன்பாடில்லை ) அனால் இந்த கருத்தை திரிபடைய செய்து அவர் 15 நிமிடம் தெரியும் என்கின்றார் பின்னர் தெரியவே வாய்ப்பில்லை என்று கூறுகின்றார் என்று மிம்பர்களிலும் பேசப்பட்டது என்றால் இதிலிருந்து இடண்டுவிடயங்கள் தெளிவாகின்றது
1) இந்த உரையைகூட சரியாக விளங்க முடியாதவர்கள் எப்படி மக்களுக்கு தெளிவை வழங்க முடியும்
2) அல்லது தங்களது விமர்சனத்தை பலப்படுத்த கருத்தை திரிபடைய செய்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றார்கள் என்பது வெளிச்சம்
தங்களை குர்ஆன் ஹதீஸின் சொந்தகாரர்கள் என்றும் பறைசார்டுபவர்களே இவ்வாறான விமர்சனங்களை அதிகம் நிகழ்த்துவதை காணமுடிந்தது
எனவே இவ்வாறான கழ்ப்புணர்ச்சி கொண்ட பொய்யான கருத்துக்களை விதைத்து விமர்சிப்பவர்களை அடையாளம் கண்டுகொல்லுவோமாக
நன்றி
நிசாம் பாரூக் சவுதி அரேபியாவிலிருந்து
No comments:
Post a Comment