Saturday, February 11, 2012

அநாகரீகமான நாகரீகம்

கலாச்சார சீர்கேட்டில்
கன்னியரும்
காளையரும்
கலந்து ஒன்றுகூடி
சீரளைவதில்
சிறப்பான நாள்

தெரு ஓரங்களிலும்
திரையரங்குகளிலும்
உல்லாச அரைகளிலும்
உல்லாசமாக
கொண்டாடுவதற்கு
அலைமோதும்
இருளடைந்த நாள்

ஒழுக்கம் பேசும்
எம்மினத்தாரும்
தவறாது
உறவாட
ஒருத்தியை அல்லது
ஒருத்தனை
தேடுமலவுக்கு
பண்பிளக்கும்
பயங்கரமான நாள்

காதல் என்று
காமத்தை
அரங்கேற்றுவதட்கு
அங்கீகரிக்கப்பட்ட
ஒருநாள்
திருவிழா

ஒரு நாளைக்கு
ஒருத்தனோடு
வாழும் அந்த
ஒழுக்கமற்ற
மேலைத்தேயத்தின்
இறக்குமதியில்
சிக்குற்று
சிதைந்து போனது
எம் சமுகம்

பண்பும்
பாசமும்
ஒழுக்கமும்
விழுப்பமும்
நிறைந்த சமுகம் நாம்
இன்று நடுத்தேருவிலே
அநாகரீகமான
நாகரிகத்தை செய்கின்றோம்

காதலர் தினமே
தன் மனைவியை
தன் கணவனை
மட்டுமே காதலிக்கும்
கலாச்சாரம்
கொண்டவர்கள் நாம்
அந்த காதலுக்கு
தினம் தேவையில்லை
இவ்வாறு சிரளியவும்
நான் தயாரில்லை
என்று கூறும்
உறுதி பெறுவோம்

No comments: