Saturday, May 5, 2012

இப்படியும் ஒரு முனுமுனுப்பு


உறவு என்று சொல்லி
உயிராய் பழகினாலும்
காதலியாக காண
கண்கள் துடித்தாலும்
எதோ ஒன்று
மூளையின் ஒரு முலையில்
மருத்துக்கொண்டே இருக்கிறதாம்  

அவளை காணாமல்
உள்ளங்கள் உடைந்துபோனாலும்
உலகம் இருண்டுபோனதாய்
உணர்ந்தாலும்
உறுதியாய் அது
காதல் என்று புரிந்தாலும்   
உள்மனது எதோ தடுக்கிறதாம்

பாசத்தில் உயிராக இருக்கின்றாள்
பண்பினிலும் உயர்வாக இருக்கின்றாள்
பணமானாலும் பணிவையே பகிர்கின்றாள்
குறையென்ருரைக்க குறையில்லாதவள்
இருந்தும் இணங்க மறுக்கும்
இருதயம்  
இல்லையென்று சொல்லும்போதும்
வெடிக்கிறதாம்

பஞ்சு மெத்தையிலே
வாழ்கின்ற பூ அவள்
தலையனைக்கேனும்
பஞ்சில்லாமல் பாடுபடும்
இவன்  
இருந்தும் இதை அறிந்தும்
இவனை  
காதலிக்கும் அவளை  
தடைகள் ஏதும் தகர்த்துவிடுமோ
என்றே அஞ்சுகின்றான்  

தடைகளை அகற்றி
கலங்காமல் அவளை  
கைபிடிக்க  
முயட்ச்சிப்பதாய் முனுமுனுக்கின்றான்  

No comments: