இருந்த
இனப்போர்
புதைகுழிகளினுள்ளே
புதைக்கப்பட்டது
இருந்தும்
இன்னுமா அதனால்
எஞ்சும் பணத்தை
தொலைக்கிறார்கள்
வெடிகுண்டு கலாச்சாரம்
முடிந்ததாய் சொல்லும்
அரசாங்கம்
மக்கள் மடியில்
விலை குண்டை அல்லவா
சுமத்துகின்றது
தேசத்தை கட்டியெழுப்ப
வெட்டியெடுக்கும்
வெளிநாட்டு
கடன் குழிகள் கூட
நம்மை முண்டியடித்து
மூடிவிடும் போலுள்ளதே
அபிவிருத்தி
என்கின்ற பெயரில்
பாதைகள் ஏதோ
அழகாகின்றது
அதைவிட பன்மடங்கு
வேகத்தில்
பரம்பரைக்கே
சொத்துக்கள்
சேர்க்கப்படுகின்றதே
மக்கள் மாக்களாய்
மடிந்தபின்
இவர்கள் பாதைகளை
அபிவிருத்தி செய்து
என்ன
வேற்றுக்கிரக வாசிகளுக்கு
விற்க போகிறார்களா
இல்லை
சந்திரனிலும் தனக்காக
சொத்து சேர்க்க
பார்க்கிறார்களா
இந்த இருளில்
இருந்தாடியே
முனுமுனுக்கின்றோம்
இருளாய் இருந்தாலும்
பரவாயில்லை
கண்களையும் பரித்துவிடதே
என்றாவது ஒருநாள்
விடியலை காணலாம்
என்கின்ற
கனவுடனேனும்
வாழ்ந்து மடியும் வரை