Sunday, September 4, 2011

அரபுலகம்



கடலாய் மக்கள் கடற்கரையில்
கன்னியர் பலர் நீர் அலையில்
சிறப்புமிக்க அரபுலகம்
சீரழிந்து போனதில்

கர்வமும் கவர்ச்சியும்
மங்கையும் மதுவும்
அடிமைத்தனம் அடாவடித்தனம்
அடியோடு அழிக்கவந்த
அன்னல்நபியின் அரபுலகம் இது


அனைத்தும் இங்கே
அரங்கேறுகின்றது
அரைகளினுள்ளே
யாவரும் அறிந்த இரகசியமாய்

மதுவுக்கு தடையுண்டாம் இங்கு
மாற்றானுக்கு பெர்மிட்டும் உண்டு ??
பெண்ணுக்கு பெருமையுண்டாம் இங்கு
சில்லரைக்காய் சீரழியும் பெண்களும் உண்டு ??
சட்டங்களும் சட்டப்படி உண்டாம் இங்கு
சட்டை பார்த்து செத்துபோகும் சட்டங்களும் உண்டு ??
பரம்பரை அட்ச்சிதான் நடக்குதாம் இங்கு
பல ஊழல்கள் நடப்பதும் உண்டு ??

இஸ்லாமிய ஆட்ச்சிஎன்று இயம்புகின்றனர் இங்கு
இசையுடன் ஆடும் இடையும்
இடை காணும் உடையும் தாராளமாய் உண்டு ??

இருப்பினும் இதற்கிடையே
அல்லாஹ்வை அஞ்சி இருப்போரும்
அருமை நபி வழி நடப்போரும் பலர் உண்டு!!!!!!

சந்தேகமே இல்லையட
சத்தியமாய் சொல்லுகின்றேன்
பெயர்கூட தெரியாத
பேரழிவு பெற்றிருக்கும்
பெருமானாரின் பிரார்த்தனை
பிரதிபளிக்கவிட்டால்

உண்மையிலேயே
உளறிவிட்டேன் உண்மைகளை
உணர்ந்தவர் பலர் இருப்பார்
இந்த உலகினிலே

No comments: