போர் குற்றம்
புரியாத மன்னவனே
உரத்த குரலில்
உரையாற்றும்
உத்தமனே
உன் குடி தவிக்கிறது
உலகமே வியக்கிறது
ஊரெங்கும் பதற்றமாய் இருக்கிறது
அசம்பாவிதங்களும் நடக்கிறது
பயிரை மேயும்
வேலிகளாய்
உன் அடிமைப்படை
அரிக்கைகளோ
வதந்தி என்கிறது
பார்த்த கண்களும்
பிடித்த கைகளும்
உதவிய உன்படையும்
பொய்யாகும் போது
எதிர்த்த மக்கள் மட்டும்
நிஜமானதே
ஓட்டு போட்ட
உத்தமிகள் இன்று
உயிர் பிழைக்க
மருத்துவமனையில்
நாடு காக்கும் அரசனே
உன் அமைதி ஆமோதிப்பது
உன்இரத்த தாகத்தையோ
இல்லையேல்
நாளை ஓட்டு கேட்க
இனவாதம் தேவையோ
நம்பிவிட்டோம் தலைவா
நீ புரியவில்லை
போர்குற்றம்
புரியாத மன்னவனே
உரத்த குரலில்
உரையாற்றும்
உத்தமனே
உன் குடி தவிக்கிறது
உலகமே வியக்கிறது
ஊரெங்கும் பதற்றமாய் இருக்கிறது
அசம்பாவிதங்களும் நடக்கிறது
பயிரை மேயும்
வேலிகளாய்
உன் அடிமைப்படை
அரிக்கைகளோ
வதந்தி என்கிறது
பார்த்த கண்களும்
பிடித்த கைகளும்
உதவிய உன்படையும்
பொய்யாகும் போது
எதிர்த்த மக்கள் மட்டும்
நிஜமானதே
ஓட்டு போட்ட
உத்தமிகள் இன்று
உயிர் பிழைக்க
மருத்துவமனையில்
நாடு காக்கும் அரசனே
உன் அமைதி ஆமோதிப்பது
உன்இரத்த தாகத்தையோ
இல்லையேல்
நாளை ஓட்டு கேட்க
இனவாதம் தேவையோ
நம்பிவிட்டோம் தலைவா
நீ புரியவில்லை
போர்குற்றம்
No comments:
Post a Comment