Thursday, May 24, 2012

இன்பக்களிப்பினிலே........

இன்பம் தேடும் மானிடா
உந்தன் இன்பக்களிப்புக்கு நீ
கொடுக்கும் வரையறை ஏதடா??

கொள்ளுப்பாட்டி முதல்
கொஞ்சும் குழந்தைவரை
அடைய நினைப்பது மகிழ்ச்சியடா
மானிடா
மண்ணிலுள்ளவரை
அனைவரினதும் முயற்ச்சியிதுவடா

காதல் கொள்ளும் இளசுகளின்
இன்ப களிப்பினிலே
வெறுப்படையும்
மூத்தோருமுண்டடா

குழந்தையாய் மாறி
பிஞ்சுகளுடன்
சண்டையிடும்
முதியோரின்
இன்பகளிப்பினிலே
வெறுப்படையும்  
பிஞ்சுகளும் உண்டடா

தென்னம் பட்டையினாலே
தெவுட்டுகின்ர உச்சிவெயிளினிலே
கிரிக்கெட்டாடும் பிள்ளைகளின்  
இன்ப களிப்பினிலே
கோவமுரும் பெற்றோருமுண்டடா

பந்தையக்குதிரை போல
பண்ப்படுத்தி
பரிட்ச்சையிலே பாயவைத்து
மாருதட்டும் பெற்றோரின்
இன்பக்களிப்பினிலே
கோவமுரும் பிள்ளைகளும் உண்டடா

கூறடா மானிடா
உன் இன் களிப்புக்கு
இரையாவது யாரடா???

ஒருவர் இன்பத்தினிலே  
மற்றவர் துன்பத்தினிலே
மகிழ்ச்சியோளி மனதில் விழ
மனநிலையும் மாறிடுதே  
சூழ்ச்சியினால் இன்பமமுரும்
சூழ்நிலையும் பெருகிடுதே

பிறருக்கு பீடையாயின்ரி  
தவறுகளுக்கு தடையாயிருந்து 
தரணியிலே
தரமாக உழைத்திடுவோம்
அந்த இன் பக்களிப்பினிலே
இவ்வுலகை கடத்திடுவோம்.





குறிப்பு  24.05.2012 லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதை குரல்கொடுப்பவர் ஷைபா மலீக்

Sunday, May 20, 2012

கேள்விக்குறியாகும் முஸ்லீம்களின் எதிர்காலம்

அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கெடுபிடிகள்  அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அனுராதபுர தர்கா ஒன்று இடிக்கப்பட்டதும் தம்புள்ளை ஜும்மா பள்ளி தாக்கப்பட்டதும் முஸ்லீம்களின் மனநிலையை பெரிதும் பாதித்த நிகழ்வுகளாக இருக்கின்ற நிலையில் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்கின்ற பேச்சுக்களும் கசிந்தவன்னமே இருக்கின்றது, இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு சம்பவம் குருணாகல் மாவட்டத்திலும் நிகழ்ந்திருப்பது அனைவரும் அறிந்த விடயமே 

இங்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகளை பார்க்கின்ற பொது இது ஒரு பாரிய இனச்சுத்திகரிப்பிட்கான ஒரு ஆரம்பமாக கருதவேண்டி இருக்கிறது. இன்று நாட்டின் எல்லா பாகங்களிலும் இஸ்லாமிய மதானுச்ட்டானங்கள் நடைபெறுகின்ற இடங்கள் பேரினவாத சக்திகளினால் கண்கானிக்கப்படுகிரதுடன் அப்படியான இடங்கள் சம்பந்தமான சட்டரீதியான அனுமதிகள் மற்றும் சட்டத்தினால் இவ்வாறான இடங்களை முடக்குவதற்கான வழிகள் இருக்கின்றனவா என்கின்ற பல விடயங்கள் கண்கானிக்கப்படுவதாக பல தகவல்கள் கசிகின்றது.


அத்துடன் இனத்துவேசத்தை வெளிக்காட்டும் விதமாகவும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் கருத்துக்கள் அடங்கிய இணையத்தளங்களும் பேஸ்புக் போன்ற சமுகவளையமைப்புக்களிலே பல கணக்குகளும் எமது நாட்டிலிருந்து இயங்குகின்றான இதுமாற்றுமின்ரி ஆங்காங்கே பல துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றது 


இப்படியான ஒரு திட்டமிடப்பட்டு நகர்த்தப்படும் செயல்களை இன்னமும் எமது சமுகம் கண்டுகொள்ளாமல் இருபது மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது ஒரு அடக்குமுறை நிகழ்கின்ற பொது ஆவேசப்படும் எமது சமுகம் மிக விரையில் அவற்றை மறந்துவிடுவதுடன் அவ்வாறான பிரச்சனை எதிர்காலத்தில் வருமேயானால் முகம்கொடுக்கும் வழிமுறைகள் பற்றி சிந்திப்பது குறைவாகவே இருக்கின்றது 


தம்புள்ளை பள்ளி விவகாரத்தின் போது கூட எமது அதிகமான அரசியல் தலைமைகளும் மதத்தலைவர்களும் ஒன்றுபட்டு செயற்பட்ட போதிலும் சிலநாட்களின் பின் அவர்களின் கருத்துக்களை பார்கின்ற பொது  இவர்களிடையே பிளவுகள் காணப்படுகின்றது என்பதும் இவர்களுக்கிடையே ஒரு சிறந்த தொடர்பாடல் காணப்படவில்லை என்பதையும் அனைவரினாலும் உணர முடிந்தது.


இப்படியான ஒரு சூழலில் எமது எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கின்றமையால் அனைத்து முஸ்லீம் கட்ச்சிகளும் அனைத்து மத இயக்கங்களும் உள்ளடங்குகின்ற விதத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கிடையே ஏகோபித்த ஒரு தலைவரை நியமித்து இப்படியான சதித்திட்டகளை முறியடிக்க கூடியவிதத்தில் எங்களை நாம் தாயார் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம் அத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இவ்விடயத்தில் மிக பொறுப்புடன் செயற்பட்டு அனைவரையும் ஒன்றுசேர்க்கும் விடயத்தில் முன்முரமாக இயங்கவேண்டும் எனவும் கருதுகின்றேன்

(கட்டாரில் இருந்து நிசாம் பாரூக்)

Thursday, May 17, 2012

என் தந்தை..... கவிதை ஒலி வடிவில்

 
லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும் வியாழன் கவிதை நேரத்தில் ஒலிபரப்பான எனது கவிதை குரல்கொடுப்பவர் ஷைபா மலீக்.... நன்றி!!!!!!!

Saturday, May 12, 2012

FACEBOOK நீதிமன்றம் பராசக்தி வடிவில்


FACEBOOK... விசித்திரம் நிறைந்த பல UPDATESகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல PROFILEகளையும் சந்தித்து  இருக்கிறது.. ஆனால்,  இந்த PROFILE ஒன்றும் விசித்திரமானதுமல்ல... PROFILEக்கு சொந்தக்காரனான நான் ஒன்றும் FACEBOOKக்கு புதுமையானவனும் அல்ல. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக FAKE PROFILE உருவாக்குபவர்களில் நானும் ஒருத்தி.

போலிப்பெயரிலே ACCOUNT  உருவாக்கி ஆண்களை ஏமாற்றினேன், பெண்களின் பெயரிலே ACCOUNT அமைத்து நல்லவர்களையும் CHECKபன்னியுள்ளேன், பெண் PROFILEகளோடு பேசி SKYPE, YAHOO, MOBILE நம்பர்களை வாங்கியுள்ளேன் இப்படியெல்லாம் POST போடுகிறார்கள் எனக்கெதிராக...

ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுத்து POST போடுவேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை.

போலிப்பெயரிலே ACCOUNT உருவாக்கி ஆண்களை ஏமாற்றினேன்.. ஏன்??? ஆண்களின் வாழ்கையில் விளையாடவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. இவ்வாறு பெண்களிடம் தொடர்ந்தும் ஏமாறக்கூடாது விழிப்பாக இருக்கணும் என்பதற்காக..

பெண்களின் பெயரிலே ACCOUNT அமைத்து நல்லவர்களையும் CHECKபன்னியுள்ளேன் ஏன்..?? நல்லவர்களை கெடுக்கவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. அவர்கள் நல்லவர்கள் என்கின்ற பெயரிலே செய்யும் அபத்தங்களை வெளியில் கொண்டுவருவதற்காக

பெண் PROFILEகளோடு பேசி SKYPE, YAHOO, MOBILE நம்பர்களை வாங்கியுள்ளேன். ஏன்??? இவர்களை எமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை பெண்கள் பெயரிலே இயங்கும் FAKE ACCOUNTகளை கண்டுபிடித்து BLOCK பண்ணுவதற்காக
 
உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் மீண்டும் COMMENT பண்ணுவீர்கள் என்று எனக்கு தெரியும்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்

சுயநலம் என்பீர்கள்... 

எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது, என்னை ஏமாற்றுப்பேர்வழி ஏமாற்றுப்பேர்வழி என MESSAGE அனுப்புகிறார்கள் எனது ACCOUNTடை BLOCK பண்ண பாக்கிரார்கள், இந்த நல்லவளின் FACEBOOK POSTகளை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய COMMENTகள் எத்தனை, LIKEகள் எத்தனை,  FRIENDகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் கம்பியூட்டர் CLASS கூடப் போனதில்லை ஆனால் FACEBOOK USE பன்னுகின்றேன், நான் மற்றவர்களின் WALLகளிள் மோசமான VIDEO PHOTO இன்னும் என்னென்னமோ எல்லாம் பார்த்திருக்கிறேன் ஆனால் ஒருபோதும் எனது WALLல் அவற்றை POST பண்ணியதேயில்லை.

படியுங்கள் என் கதையை, எனது PAGEசை BLOCK அல்லது CLOSE பண்ணுவதற்கு முன் தயவு செய்து படியுங்கள்.

இலங்கை நாட்டிலே பிறந்தவள் நான், பிறக்க ஒரு வீடு பிழைக்க இன்னுமொரு வீடு, பெண்கள் வாழ்க்கையிலே  நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
COMPUTER எனக்கு ஆர்வமாக இருந்தது பல நல்ல விடயங்களை எனக்கு நெருக்கமாக்கியது

நல்லவிடயங்களை தேடி படிப்பதற்காக நான் இந்த INTERNETடை நோக்கி ஓடோடி வந்தேன் ஆனால் அது என்னை இன்று ஒரு மோசடிக்காரியாக உங்கள் முன் நிறுத்தி இருக்கிறது. இதன் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருத்தி பணத்தை இலந்திருக்கின்றேன் நேரத்தையும் இதிலே வீணாக்கி இருக்கின்றேன் கடைசியிலே INTERNETலே பைத்தியமாக மாறினேன். FACEBOOKகை கண்டேன் ACCOUNT OPEN பண்ணினேன்.

எனது PROFILE பெயரோ மங்களகரமான பெயர் ஆனால் மங்களம் இல்லை இப்பொழுது  மோசமான VIDEOக்கள் ஆபாசமான PHOTOக்களை TAGபண்ணினார்கள்  REMOVE பண்ணினேன் தேடித்தேடி REMOVE பண்ணினேன்... உதவ வந்தார்கள் சிலர் அவர்களும் கடைசியிலே என் காதலை கைமாறாக கேட்டார்கள். 

இதோ என்னை குற்றம் சாட்டி MESSAGEஜும் POSTடும் போடுகிறார்களே இவர்கள் எல்லாம் FAKE PROFILE வைத்து என்னை மடக்க வந்தார்கள் நான் உசாரகிவிட்டேன் இல்லையேல் எனது VIDEO அன்றே INTERNETல் வந்திருக்கும் நான் தற்கொலை செய்யவேண்டி ஏற்பட்டிருக்கும்.
 
நான் மட்டும் நினைத்து இருந்தால் ஜாலியாக CHAT பண்ணி இருக்கலாம் , SKYPE, YAHOO ஊடாக VIDEO CALL பேசியிருக்கலாம், நேரிலே சந்தித்து ஓரமாய் போயிருக்கலாம்

ஆனால் இதை தானா இந்த  உலகம் விரும்புகிறது

நல்லவனாக பேசி என்னை எமாற்றப்பார்த்தார்கள்...... BLOCK பண்ணினேன்...

பெண்கள் போலவே என்னோடு பேசி இறுதியில் ஆண் என கூறி என்னை கவுக்க பார்த்தார்கள்.... BLOCK பண்ணினேன்.... 

தெரிந்தவர்கள் போலவே MESSAGE அனுப்பி என்னை ADD பன்னவைத்து கேர்றேக்ட் பன்னபாத்தார்கள் ...... BLOCK பண்ணினேன்......
 
BLOCK பண்ணினேன்  BLOCK பண்ணினேன் அனைவருமே BLOCK ஆகிவிட்டனர் .... எனது FRIEND LIST காலி ஆகிவிட்டது திரும்பி புதிய பெயரிலே ACCOUNT OPENபன்னிவிட்டேன்

நான் BLOCK பண்ணுவதை நிறுத்தி இருக்க வேண்டும்,  இவ்வாறு ஏமாற்றும் ACCOUNTகளை போக்கி இருக்க வேண்டும், என்னோடு உண்மையை பேசியிருக்க வேண்டும் இன்று எனக்கெதிராக POST மற்றும் MESSAGE  பண்ணுபவர்கள் இதை செய்தார்களா???????

 போலி PROFILEளை நம்பி ஏமாந்தது யார் குற்றம்??  எனது குற்றாமா?  பெண் பெயரில் PROFILEகளை கண்டவுடன் பின்னால் அலைந்து நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நல்லவர்களாக நடிப்பவர்களை கண்டுபிடித்தது நாரவைத்தது யார் குற்றம்? என் குற்றமா? வெளியிலே நல்லவனை போல நடித்துக்கொண்டு FACEBOOKகிலே ஏமாற்றித்திரியும் கயவர்களின் குற்றமா?

பெண் PROFILEகளோடு பேசி SKYPE, YAHOO, MOBILE நம்பர்களை வாங்கி பெண்களா என்று CHECK பண்ணியது என் குற்றமா? பெண்கள் பெயரிலும் ஏமாற்றும் ஆண்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற  குற்றவாளிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

 குறிப்பு:-  இது ஒரு நகைச்சுவை விருந்தாக இருந்தாலும் இதன்மூலம் இன்றைய பாசெபூக் உலகில் நிகழ்கின்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன் ஆகாவே இதுகுறித்து அனைவரும் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்ற தகவலையும் பதிய ஆசைப்படுகின்றேன்

Saturday, May 5, 2012

இப்படியும் ஒரு முனுமுனுப்பு


உறவு என்று சொல்லி
உயிராய் பழகினாலும்
காதலியாக காண
கண்கள் துடித்தாலும்
எதோ ஒன்று
மூளையின் ஒரு முலையில்
மருத்துக்கொண்டே இருக்கிறதாம்  

அவளை காணாமல்
உள்ளங்கள் உடைந்துபோனாலும்
உலகம் இருண்டுபோனதாய்
உணர்ந்தாலும்
உறுதியாய் அது
காதல் என்று புரிந்தாலும்   
உள்மனது எதோ தடுக்கிறதாம்

பாசத்தில் உயிராக இருக்கின்றாள்
பண்பினிலும் உயர்வாக இருக்கின்றாள்
பணமானாலும் பணிவையே பகிர்கின்றாள்
குறையென்ருரைக்க குறையில்லாதவள்
இருந்தும் இணங்க மறுக்கும்
இருதயம்  
இல்லையென்று சொல்லும்போதும்
வெடிக்கிறதாம்

பஞ்சு மெத்தையிலே
வாழ்கின்ற பூ அவள்
தலையனைக்கேனும்
பஞ்சில்லாமல் பாடுபடும்
இவன்  
இருந்தும் இதை அறிந்தும்
இவனை  
காதலிக்கும் அவளை  
தடைகள் ஏதும் தகர்த்துவிடுமோ
என்றே அஞ்சுகின்றான்  

தடைகளை அகற்றி
கலங்காமல் அவளை  
கைபிடிக்க  
முயட்ச்சிப்பதாய் முனுமுனுக்கின்றான்