Monday, December 19, 2011

வெளிநாட்டில் பணம் பெரும் முறைகள்


கட்டாரில் வேலைசெய்கின்ர நான் ஒருநாள் வேலைநிமித்தம் ஒரு
பிரதேசத்திற்கு சென்றேன் அங்கு எனது மேற்பார்வையை முடித்துவிட்டு ஒரு கூட்டத்திற்கு செல்லவேண்டி இருந்தது. அதற்காக திரும்பும் போது எனது ஓட்டுனர் “சார் அந்த களஞ்சியத்தில் ஒரு இலங்கையர் இருக்கின்றார் உங்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்” என கூறினார். உடனே திரும்பிப்பார்த்தேன் அது ஒரு தளபாட களஞ்சியம். கூட்டத்திற்கு செல்வதற்கும் போதுமானளவு நேரம் இருந்ததால் அவ்விடத்திகு செல்லுமாறு ஓட்டுனரை வேண்டினேன்.
கிட்டத்தட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்தார். அவருடன் சுகம்விசாரித்து விட்டு தளபாடங்களின் விலைகள் பற்றி விசாரித்தேன். ஒரு படுக்கையறை தளபாடத்தொகுதி என்னை அதிகம் கவர்ந்தது அதன் விலையை கேட்டபொழுது வியப்படைந்தேன். மீண்டும் விபரமாக கேட்டேன் வெறும் QR 2300 (LR 69,000) எனக்கூரியவன் இதனை நீங்கள் கடையில் வாங்கினால் QR 8200 (LR 246,000) எனக்கூறினான். நடப்பதை ஊகித்துக்கொண்ட நான் இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்னும் கொஞ்சம் குறைத்து தாருங்கள் நான் 2 set வாங்குகின்றேன் எனக்கூரியபோது அவன் QR 2000 (LR 60,000) இற்கு தருவதாக கூறினான் பின், இதற்கு ரசீது(Bill) தரமுடியுமா என கேட்டேன். முடியாது என மறுத்துவிட்டார். தற்போது புரிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
இவ்வாறான பல விடயங்கள் இந்த மத்தியகிழக்கில் நடைபெறுகின்றது. இங்கு வேலை செய்பவர்கள் மாதமுடிவில் தவறாது பணத்தை அனுப்பிவைக்கின்றனர் ஆனால் மனைவியோ அல்லது பெற்றோர்களோ இவர்களுடைய சம்பளம் எவ்வளவு எவ்வாறு இவ்வளவு பணம் அனுப்புகிறார்கள் என்று கேட்பதுவுமில்லை அவ்வாறு ஒருசிலர் வினவினாலும் அதற்கு மேலதிகநேரம் அல்லது பகுதிநேர வேலை செய்ததாகவோ என கூறிவிடுகின்றனர்.
மற்றுமொரு நாள் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்புநிலயத்துக்கு சென்ற போது மறுபக்கம் எனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு வாகனம் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருன்தது அந்த ஓட்டுனர் எனது வாகனத்தை கவனிக்க வில்லை நான் கார் கண்ணாடியை சரிசெய்து அவன் QR 10 இற்கு எரிபொருள் நிரப்பியத்தை உருதிசெய்துகொண்டு நானும் எரிபொருள் நிரப்பிவிட்டு காரியாலயம் சென்றுவிட்டேன். மறுநாள் அந்த ரசீது(Bill) அதற்கு பொறுப்பான ஒரு FORMAN ஊடாக எனது முகான்மையாலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது நான் அந்த குறித்த வாகனத்தின் ரசீதை பார்த்தபோது வியப்படைந்து ஓட்டுனருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன் அப்போது அவன் QR 15 இற்கு நிரப்பியதாக கூறினான் (QR 5 ஓட்டுனரின் கைக்கு போயுள்ளது) ஆனால் QR 45 என ரசீதில் காணப்பட்டது (QR 30 FORMAN கையிட்கு போயுள்ளது)
எரிபொருள் நிரப்புவதற்கு எல்லா நிறுவனங்களும் பல வழிகளை கையாளுகின்றனர் ஆனால் இந்த எல்லா முறைகளிலும் பணமோசடி நடைபெறுகின்றது 5% இற்கும் குறைவானவர்களே இவ்வாறான மோசடிகளை செய்யாது இருக்கின்றனர் என்று கூறமுடியும்.
பொதுவாக இங்கு வேலைசெய்யும் அதிகமானவர்கள் தான் பெறுகின்ற சம்பளத்தை முழுவதுமாக நாட்டிற்கு அனுப்பிவிட்டு தனது செலவிற்கு வேறு எந்தவிதத்திலாவது பணம் தேடும் பலக்கமுடயவர்கலாகவே இருக்கின்றனர் இதன் போது இவ்வாறான கலவுகளிலும் ஏமாற்றுவேளைகளிலும் ஈடுபடுகின்றதுடன் அவற்றை ஒரு தவறாகா கருதுவதில்லை.
அன்று ஒரு வியாழக்கிழமை மாலை நேரம் நான் ஒரு நண்பனை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். அங்கு அவன் இருக்கவில்லை தொலைபேசியில் அழைத்த போது அறையிலே இருக்குமாறும் 10 நிமிடத்தில் வருவதாகவும் கூறினான். பின்பு அறையிலிருந்த மற்றைய நண்பர்களிடம் வினவியபோது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறி சிரித்தார்கள். சற்று புரிந்தும் புரியாதவனுமாக இருந்த எனக்கு அனைத்துமே ஒருகணத்தில் தெளிவாகிவிட்டது. நண்பனும் அவனது நண்பன் ஒருவனும் ஒரு பொதியினை மிகவும் கஷ்டப்பட்டு தூக்கி வன்தனர் அதனுள்ளே செப்பு (CUPPER) கிட்டத்தட்ட 50kg காணப்பட்டது
அதாவது ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு மின்சாரத்தை நிலத்துக்கடியால் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் CABLE திருடி அதிலுள்ள கம்பிகளை எடுத்து சென்புக்கு விற்கின்றனர் ஒரு KG QR 15 தொடக்கம் QR 20 வரை விற்பதாகவும் தெரிந்துகொண்டேன்
இவை எனது அனுபவத்தில் நான் கண்கூடாக கண்டவற்றில் சிலதையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். நான் கண்டதும் கேட்டதுமான தகவல்களை வைத்து பார்க்கின்ற பொழுது வெளிநாடுகளில் வேலை செய்கின்றவர்களில் 90% ஆனவர்கள் எதோ ஒருவகையில் முறைகேடான விதத்தில் பணமோ பொருளோ ஈட்டுகின்றனர்.
அநேகமானவர்கள் நாடு திரும்பும் போது பெட்டி அனுப்புவார்கள் இப்பெட்டிகளில் வருகின்ற பொருட்களில் அதிகமானவை இவ்வாறு ஈட்டியவைகளாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.
எனவே விட்டிலுள்ளவர்கள் தனது கணவனோ, சகோதரனோ அல்லது மகனோ வெளிநாட்டில் இருந்து அனுப்புகின்ற பணமானாலும் பொருளானாலும் இதனை எவ்வாறு ஈட்டி இருக்க கூடும் என்றும் அவனது சம்பளத்துடன் ஒப்பிட்டு அது சாத்தியமா என்பதை அவதாநிப்பதுடன் அவர்களது வாருமானத்திட்கு ஏற்ப தேவைகளை கூறுபவர்களாக இருக்க வேண்டும் தேவைகள் அதிகமாகின்ற போது அல்லது அத்தேவைகளை மிக குறுகிய காலத்தில் அடைவதற்கு எத்தனிக்கின்ற சந்தர்ப்பங்களிலே இவ்வாறான தவறுகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்
இவ்வாறான முறைகளை தவித்து நேர்மையான வழிகளில் முன்னேற முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் உழைத்து உயிர்வாழ்வது என்றும் மனநிம்மதியையும் சிறந்த எதிர்காலத்தையும் தரும் என நினைக்கின்றேன்
-Nizam Farook-

Saturday, November 26, 2011

காதலிலே சிக்குண்டு



இரவினிலே தூங்கும்
போது
தொலைத்தது எந்தன்
இதயமென்று
உணர்ந்துகொண்டேன்

எத்தனையோ
தத்தை கண்டு
தாவாத இந்த இதயம்
பித்தாய் போனதே
உந்தன் முகத்தை கண்டு

தயக்கம் இன்றி
எதையும் சொல்லும்
எந்தன் உள்ளம்
தடுமாறுகின்றது
சொல்ல நினைக்கையிலே
நாவும் செயளிலக்கின்றது

காணத்துடிக்கும் இதயமும்
உன்னை கண்டவுடனே
எண்ணிக்கை மறந்து துடிக்கிறது
இருமடங்கு அடிக்கிறது
அதன் ஓசையே
உந்தன் காதுகளையும்
அடைக்கிறது

சிங்கமாக இருந்த நான்
காதலிலே சிக்குண்டு
சிலந்தி போல் ஆகிவிட்டேன்-இது
சுவர்க்கமா நரகமா என்பதையும்
சீக்கிரமே உணர்ந்துவிட்டேன்

திருடனாக மாற முயற்சிக்கின்றேன்
திருட்டுப்போன எந்தன்
இதயத்தை திருப்பிபெற
இல்லாவிட்டால்
உந்தன் இதயத்தை
திருடிவர

Saturday, November 19, 2011

என் தந்தை

ஆறுதலாய் நீ இருந்தாய்
அழகான பலகோடி
கனவுகளும் நீ தந்தாய்
கச்சிதமாய் வாழும்
கலையினையும் கற்றுத்தந்தாய்

காரிருளை அகற்றும் அந்த
கதிரவனையும் நீ வென்றாய்
கடமைக்காய் அவ்விருலிலே நீ நடந்தாய்
கடமைமுடிந்து திரும்பும் உன்னை
அடிவாநிளிருந்த அந்த
கதிரவனே கண்டு வியந்தான்

தன்துயர் மறைத்து
தவறாது நீ உழைத்து
தன்குடும்பன்தனை காத்து
ஊரார் மத்தியில் உயர்த்து வாழ
மருவுலகிலும் மகத்துவம் பெற்றிட
உன்னை நீ அர்ப்பணித்து
எம்மை நீ வளர்த்தாய்

கொடிய வறுமையிலும்
கொட்டிய அந்த செளுமையிலும்
கொள்கையோடு நீ இருந்தாய்
அந்த கொள்கையின் உறுதியிளே
உன்பிள்ளைகளையும் உருவாக்கினாய்

தயக்கமே இன்றி உன்
தவறுகளை ஏற்றுக்கொள்வாய்
தவரியவர்களையும் தட்டிக்கேட்பாய்
தப்பு செய்பவனையும் எதிர்த்து நிற்பாய்
அவ்வண்ணமே எம்மையும் வார்த்தேடுத்தாய்

உன்னுடல் வருந்தினாலும்
உன்பிள்ளை சிரிப்பில்
சுகம் கண்ட நீ
என்னுடல் வருந்தாமலே
வாழ வழிவகுத்த தந்தாய்

பலகோடி பாடுபட்டு
பக்குவமாய் கரை சேர்த்து விட்டு
பாரினிலே நாம்
தடம்பதிக்கும் போது
தவறிவிட்டாய்
நீ எம்மை பிரிந்துவிட்டாய்

உன்கனவு நனவானது
என்னினைவு கனவானது
கடமையையும் தாண்டி
காரியம் செய்தாய் நீ
இருந்தும்
உனக்காக என்ன புரிந்தான்
இந்த பாவி இப்புமியிலே

இறையடி சேர்ந்த உனக்காக
இரஞ்சுகின்றேன்
சுவனத்தையே பரிசாக
வேண்டுகின்றேன்
அங்கும் உன்னைக்காண
நாடுகின்றேன்
அதற்காகவே இன்று
உயிர் வாழுகின்றேன்

Monday, October 31, 2011

ஒழுக்கச்சீர்கேடுகளும் பணிப்பெண்களும்

நான் வேலை நிமித்தம் மத்தியகிழக்கு நாடோன்றிலே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றேன். இங்கு நடைபெறுகின்ற பல விடயங்கள் பலர் தெரிந்திருந்தாலும் அவைபற்றி வெளிப்படையாக பேசுவது அரிதாகவே இருக்கிறது. இப்படியான ஒருவிடயம் பற்றி பேசலாம் என்று நினைக்கின்றேன்
மத்தியகிழக்கு நாடு என்கின்றபோது அனைவருக்கும் நினைவில் வருவது வீட்டுப்பணிப்பெண்கள் (HOUSE MAID). நமது நாட்டில் பெருந்தொகையான பெண்கள் மத்தியகிழக்கு நாடுகளிலும் இவை அல்லாத பல நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பணிப்பெண்ள் மத்தியில் காணப்படுகின்ற ஒழுக்கச்சீர்கேடுகளையும் அவை நடைபெறும் விதங்கள் பற்றியும் சற்று வெளிப்படையாக பார்ப்போம்.
இங்கு ஒவ்வொரு விட்டிலும் சாரதிகளும் பணிப்பெண்களும் கட்டாயமாக இருப்பார்கள். விட்டுவேளைகளை பார்க்கும் பணிப்பெண்கள், பிள்ளைகள் (பெண் பிள்ளைகள் அல்லது சிருவயதுடைய ஆண் பிள்ளைகள்) பாடசாலைக்கு போகும் போது அவர்களது புத்தக பொதிகளை சுமந்துகொண்டு சாரதியுடன் பாடசாலைக்கு சென்று பிள்ளைகளை அங்கு விட்டுவிட்டு விடு திரும்பவேண்டும் இவ்வாறே அவர்களை பாடசாலை முடிந்து வரும்போதும் சென்று அழைத்துவர வேண்டும். இதுதவிர விட்டுக்கு தேவையான உணவு பண்டங்கள் வாங்குவதற்காக super market களுக்கு போகும் போதும் எஜமானியுடனும் சாரதியுடனும் சென்று வாங்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பவேண்டும் சில இடங்களில் சாரதியுடன் தனியாக பணிப்பெண்களை அனுப்பிவைப்பதும் உண்டு.
அநேகமான பணிப்பெண்களுக்கு தொலைபேசிகள் வைத்திருப்பதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் 95% மானோர் மறைவாக தொலைபேசி பாவிக்கின்றனர். இன்னும் உணவுகள் இவர்களுக்கு விருப்பமான விதத்தில் சமைத்து சாப்பிட அநேகமான விடுகளில் அனுமதி வழங்கப்படும் இதன்போது சாரதிக்கும் உணவு வழங்குவது வழக்கமாக கொள்ளப்படும். காரணம் அநேகமான சாரதிகள் இந்தியா அல்லது இலங்கையை நாட்டவர்களாகவே இருக்கின்றனர்.
இந்த சூழலில் பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக இவர்கள் வேலை செய்யும் வீடுகளிலுள்ள ஆண்களினால் (வீட்டுத் தலைவன், ஆண் பிள்ளைகள், முதியவர்கள்) பல பலாத்காரங்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இவர்கள் அந்த வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். அல்லது வேறுவழியின்றி அவற்றுக்கு பழக்கப்பட்டு விடுகின்றனர் இதன்மூலம் அவர்கள் பல பலன்களை (பணம், சொகுசு) அடைகின்றனர்.
வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் அவர்களுக்கு எதோ ஒருவகையில் தெரிந்தவர்களுடன் தொடர்புகொண்டு அல்லது பாதைகளில் TAXI ஓட்டுனர்கள் மூலம் ஒருசாரார் EMBERCY சென்று நாடுதிரும்புகின்றனர். மற்றவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இருப்பார்கள். எனவே இவர்கள் அந்த அந்நிய ஆண்களுடன் சென்று அவர்களின் அறைகளில் தங்கி வேறு ஒரு வீடு தேடுவார்கள். எனவே ஒன்றாக இருப்பதனால் அந்த சூழல் அவர்களை தவறிழைக்க வைத்துவிடுகிறது பின் அது விரும்பியோ விரும்பாமலோ தொடர்கிறது. சிலர் இப்பெண்களை புதிய வீடுகளுக்கு செர்த்துவிடும்போது தனது மனைவி என கூறி ஒப்படைக்கின்றனர் (அராபியர்கள் எழிதில் நம்பிவிடுவார்கள்) பின் எந்த தடைகளுமின்றி அவர்கள் நாடுதிரும்பும்வரை கணவன் மனைவியாவே இருப்பார்கள்.
இன்னும் சில இடங்களில் புதிய வேலைக்கான வீடு தேடுவதட்கிடையில் இப்பெண்கள் பல ஆண்களின் அறைகளுக்கு மாறவேண்டி ஏற்படுகின்றது. காரணம் ஒருவருடைய அறையில் இருக்கும் போது எவரேனும் காவற்துறைக்கு தகவல் கொடுத்தால் இருவரும் சிறைவைக்கப்படுவார்கள் என்கின்ற அச்சம் அல்லது இதன் மூலமும் பணம் ஈட்டும் நோக்கிலும் இவ்வாறு நடைபெறுகின்றது. இந்நிலையில் அப்பெண்களின் நிலை மிக கவலைக்கிடமனதாக இருக்கிறது இன்னும் பெண்கள் ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னுமொரு (தூரப்)பிரதேசத்துக்கு கூட்டிச்செல்லும் போது container பெட்டிகளில் வைத்து கூட்டிச்செல்லப்படுகின்றது. இச்சம்பவங்கள் சவுதி அரேபியவிலே அதிகம் நடைபெறுகின்றது
அனைத்தையும் இழந்து அல்லது துறந்துவிட்டு வருகின்ற இப்பெண்கள். இங்கு வந்தவுடன் அவர்களுக்கு தெரியாத மொழி புதிய முகங்கள் பழக்கமற்ற உணவுகள் இவற்றால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு மத்தியில் வேலைகளை செய்யும் போது இவர்களது கஷ்டங்களை பகிர்ந்துகொல்வதட்கு எவரும் இருப்பதில்லை. இந்நிலையில் இவர்களுக்கு ஆறுதலாக இருப்பதற்காக சாரதிகளுடன் அல்லது இன்னும்சிலர் super market அல்லது வேறு ஏதும் இடங்களில் தனது மொழி பேசுகின்ற ஒருவரை பார்த்தவுடன் அவர்களுடன் பேசுவார்கள் பின் தொலைபேசி இலக்கங்களை பரிமாற்றிக்கொள்வார்கள். பின் உரையாடல்கள் தொடரும் .
பணிப்பெண்களுக்கு தனி அரை வழங்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் இவர்கள் கண்காநிக்கப்படுவது இல்லை. வீட்டிலுள்ள எல்லா உணவு பொருட்களும் இவர்களது பொறுப்பிலே இருக்கும்
மற்றுமொரு சிர்கேடாக கூறுவது என்றால் தொலைபேசி மூலம் பேசுகின்ற ஆண்களிடமிருந்து தொலைபேசிக்கு card வாங்கி அனுப்புதல் மற்றும் சிறுசிறு உதவிகளை பெற்றுக்கொள்வார்கள் இதன் பின் அப்பெண்கள் தான் வேலைசெய்யும் விட்டிலுள்ள உணவு பொருட்களை இவர்களுக்கு கொடுப்பார்கள். இதற்காக இவர்கள் கையாளும் உக்திகளில் ஒன்று அந்த ஆண்களை தனது விட்டுக்கு அருகில் வரும்படி சொல்லிவிட்டு இப்பெண்கள் அப்பண்டங்களை வெளியே வைத்துவிட்டு செல்வார்கள் பின் இவர்கள் அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவான் இவ்வாறு பல திருட்டுக்கள் நடைபெறுகின்றது. இப்படி இவர்களுக்கு இடையிலே ஒரு பெரிய பிணைப்பு ஏற்படுகின்றது இதன் விளைவாக இப்பெண்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக அவ்வான்களை தனது அரைகளுக்கு அனுமதிப்பதும் உண்டு (இப்பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் உறக்கத்திலுள்ள நேரம் விளிக்கும் நேரம் அனைத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள்)
வீட்டு வேலைகள் செய்வதிலிருந்து கடைகளுக்கு செல்லுவது வரை பணிப்பெண்களுக்கும் அவ்வீட்டில் உள்ள ஒட்டுனருக்கும் இல்டையிலே அதிக தொடர்ப்பு காணப்படும் அந்த சூழலும் இவர்களை தவறான வழியில் இட்டுச்செல்லுகின்றது அதிகமான இடங்களில் இவர்களுக்கு இடையில் தவறான தொடர்புகள் சர்வசாதாரணமாக கருதப்படுகின்றது
இன்னும் குவைத் போன்ற நாடுகளில் இப்பனிப்பெண்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது இதன்போது இவர்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரிவார்கள் புதிய நடப்புக்களை எட்படுத்திக்கொல்வார்கள் அவர்களுடன் உல்லாசமாக இருப்பார்கள். இப்படி ஆரம்பித்து இன்னும் சிலர் படிப்படியாக பணத்திற்காக தவறான வழியில் செல்கின்றனர்.
எந்தப்பெண்ணும் வெளிநாடு செல்லும் போது இவ்வாறான எண்ணங்களுடன் வருவதில்லை ஆனால் இங்கு வந்தவுடன் சுழலும் ஏக்கமும் அவர்களின் மனநிலையை படிப்படியாக மாற்றுகின்றது இறுதியில் நான் மேலே கூறிய சீர்கேடுகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை.
என்னை பொருத்தமட்டில் 10% - 15% பெண்களே இவ்வாறான சீர்கேடுகளில் சிக்காது இருக்கின்றனர் இந்நிலை ஏற்படுவதற்கு பெண்களே அல்லது ஆண்களே காரணம் என்று கூறமுடியாது. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் தீப்பற்றியே தீரும்.
எனவே இப்படியான ஒரு சுழலுக்கு வேலைக்கு வருகின்ற போது கணவன் மனைவி இருவரும் ஒரே விட்டில் வேலைக்கு வருவார்களேயானால் இவ்வாறான ஒழுக்கசிர்கேடுகளும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கிறது.
இது தவிர பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகின்ற பெற்றோர்களும் உடன்பிறப்புக்களும் தெரிந்துகொண்டே மிகப்பெரிய தவறை செய்கின்றீர்கள் அத்துடன் இங்கு நடைபெறுகின்ற எல்லா சீர்கேடுகளுக்கும் நீங்களே முளுகாரணமாக இருக்கிண்றீன்ரக் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

Saturday, October 22, 2011

தாயே உனக்காக


-->
உயிர் தந்த உறவே
உலகிலுள்ள உன்னத உயிரேநீ
உயிர் ஜீவி அனைத்துக்கும் பொதுவே
அதுவே தாய்மையெனும் உறவே

தாய்பற்றி பாடவேண்டும்
தரமான உயிர் அவளென்று
உலகத்தார் உணரவேண்டும்
இவ்வுலகில் அவள் புகலுயர வேண்டும்
பார்போற்றும் பிள்ளைவேண்டும்
பக்குவமாய் படிக்கவேண்டும்
பணிவாக நடக்கவேண்டும்
என்கின்ற பலநூரு
எதிர்பார்ப்போடு பெற்றெடுத்த
என் தெய்வமே

ஆட்சி மாறும்போது
தடம்புரளும் அரச
ஊடகம் போல
உன்கணவாய் என்னுருவமே
இல்லாதுபோக
என்னையே உங்கணவாய்
ஏற்றுக்கொண்டாய்

என்னை நீ பெற்றெடுத்தாய்
உன்னை நீ விட்டுக்கொடுத்தாய்
நிஜமாக நானிருக்க
-->
நிழலாக நீ தொடர்ந்தாய்


உறவாலே உயிர்தந்தாய்
உள்ளம் நிறைய வலிதந்தேன்
உன்னாமால் உணவளித்தாய்
உதறிவிட்டு ஓடிவிட்டேன்
காய்ச்சல் தலைவலி
தனக்கு வந்தாலும் துடிக்காத நீ
தன் பிள்ளைக்கு தடிமன் என்றாலே
துவண்டு போகின்றாய்

உன்னன்பை உரைப்பதேன்பது
கடல் நீரளக்க
உள்ளங்கையை பிடிக்கும்
மடமை போல் ஆனது

பெற்றெடுத்த அன்னை
நீ பக்குவமாய் என்னை
வாழவைத்ததட்க்காய் உன்னை
வாழும் வரையும் இம்மண்ணில்
பொக்கிசமாய் காத்தருள
வேண்டுகிறேன் வல்லோன் அவனை

நிலா ஒளியில்அந்த
நீல வானம்
நிம்மதியான நேரம்
ஒன்றுகூடி உளற வேண்டும்
உன்மடியில் நான் உறங்க வேண்டும்
தலைகோதி நீ என்னை
தாலாட்ட வேண்டும்

உனக்கு நான் அடிபணிய வேண்டும்
உள்ளம் நிறைய பணிபுரிய வேண்டும்
என்மடியில் நீ உறங்கிட வேண்டும்
உயிர் பிரியும் வரையும்
என்னோடே நீ இருந்திட வேண்டும்
சொர்க்கத்திலும் அன்னையாய்
-->உன்னை நான் அடைந்திட வேண்டும்