இரவினிலே தூங்கும்
போது
தொலைத்தது எந்தன்
இதயமென்று
உணர்ந்துகொண்டேன்
எத்தனையோ
தத்தை கண்டு
தாவாத இந்த இதயம்
பித்தாய் போனதே
உந்தன் முகத்தை கண்டு
தயக்கம் இன்றி
எதையும் சொல்லும்
எந்தன் உள்ளம்
தடுமாறுகின்றது
சொல்ல நினைக்கையிலே
நாவும் செயளிலக்கின்றது
காணத்துடிக்கும் இதயமும்
உன்னை கண்டவுடனே
எண்ணிக்கை மறந்து துடிக்கிறது
இருமடங்கு அடிக்கிறது
அதன் ஓசையே
உந்தன் காதுகளையும்
அடைக்கிறது
சிங்கமாக இருந்த நான்
காதலிலே சிக்குண்டு
சிலந்தி போல் ஆகிவிட்டேன்-இது
சுவர்க்கமா நரகமா என்பதையும்
சீக்கிரமே உணர்ந்துவிட்டேன்
திருடனாக மாற முயற்சிக்கின்றேன்
திருட்டுப்போன எந்தன்
இதயத்தை திருப்பிபெற
இல்லாவிட்டால்
உந்தன் இதயத்தை
திருடிவர
No comments:
Post a Comment