Tuesday, October 30, 2012

ஆயுட்கைதியா?.. தூக்குக்கைதியா?




இமைகள் லிரண்டின் சரணம்
இதயத்துடிப்பின்
அர்த்தம் மாறத்தொடங்கும் தருணம்
காதலெனும் நீதிமன்றத்தில்
தூக்குக்கைதியாய் வாதிடும் தருணம்
  
உச்சி வெயிளினிலும்
உச்சி குளிர்ந்து
உள்ளங்கால் வியர்க்கும்
மெய்மறந்து மேனி
நடுநடுங்க
ஓராயிரம் ஹோர்மோன்கள்
ஊற்றெடுக்கும் தருணம் அது

நாடியிலே பனிக்கட்டியும்
நாலத்தினிலே வெந்நீரும்
ஊடுருவும் ஒரு
வேதனை கலந்த சுகம் அது
காதலைச் சொல்லும் கனம்

பேச்சுக்கள் நளினமடைய
மூச்சுக்கள் மூர்ச்சையாக
ஆழ்கடலின் பூகம்பத்தை  
அடிநெஞ்சில் உணரும் தருணம்

கண் சிமிட்டி
தலைசொரிந்து கையசைக்கும் 
கனப்போளுதினிலே
மௌன அலைகள் தூதுபோக

அவள் ஏவும்
அம்புகள்
புன்னகையாய் வந்து
இதயத்தை சிதறடித்தால்
காதட்சிரையில்
ஆயுட்கைதியாவான்
அவை நெருப்பாய் வந்து
இதயத்தை எரித்தால்
தூக்குக்கைதியாவான்   



லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும் வியாழன் கவிதை நேரத்தில் ஒலிபரப்பான எனது கவிதை குரல்கொடுப்பவர் ஷைபா மலீக்.... 
நன்றி!!!!!!!

No comments: