Tuesday, October 30, 2012

ஆயுட்கைதியா?.. தூக்குக்கைதியா?




இமைகள் லிரண்டின் சரணம்
இதயத்துடிப்பின்
அர்த்தம் மாறத்தொடங்கும் தருணம்
காதலெனும் நீதிமன்றத்தில்
தூக்குக்கைதியாய் வாதிடும் தருணம்
  
உச்சி வெயிளினிலும்
உச்சி குளிர்ந்து
உள்ளங்கால் வியர்க்கும்
மெய்மறந்து மேனி
நடுநடுங்க
ஓராயிரம் ஹோர்மோன்கள்
ஊற்றெடுக்கும் தருணம் அது

நாடியிலே பனிக்கட்டியும்
நாலத்தினிலே வெந்நீரும்
ஊடுருவும் ஒரு
வேதனை கலந்த சுகம் அது
காதலைச் சொல்லும் கனம்

பேச்சுக்கள் நளினமடைய
மூச்சுக்கள் மூர்ச்சையாக
ஆழ்கடலின் பூகம்பத்தை  
அடிநெஞ்சில் உணரும் தருணம்

கண் சிமிட்டி
தலைசொரிந்து கையசைக்கும் 
கனப்போளுதினிலே
மௌன அலைகள் தூதுபோக

அவள் ஏவும்
அம்புகள்
புன்னகையாய் வந்து
இதயத்தை சிதறடித்தால்
காதட்சிரையில்
ஆயுட்கைதியாவான்
அவை நெருப்பாய் வந்து
இதயத்தை எரித்தால்
தூக்குக்கைதியாவான்   



லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும் வியாழன் கவிதை நேரத்தில் ஒலிபரப்பான எனது கவிதை குரல்கொடுப்பவர் ஷைபா மலீக்.... 
நன்றி!!!!!!!

Saturday, October 20, 2012

மகனே அடி மகளே


பெற்றெடுத்த குழந்தையை
பொக்கிசமாய் பார்புகற்ற 
வளர்த்தெடுக்க
பாடுபடும் மகனே
அடி மகளே
உன்னையும் ஆளாக்க இத்தாய்
எப்பாடுபட்டாள் என்பதையும்
எண்ணிப்பார்

பண்புதனையும்
பணிவுதனையும்
அன்புதனையும் ஆளாக
அறிவுதனையும் ஊட்டிவர்த்து
உனக்காகவே உழைத்த
இப்பெற்றோரையும் சற்று திரும்பிப்பார்

பெண்ணே
தலைக்கனம் பிடித்தவளாய்
தரையினில் நீ வாழாதே
தரமான உன் பெற்றோரையும்
தகுதிமிக்க உன் கணவனையும்
தரம்குரைவாய் நினைக்க
வழிவகுக்கதே

நல்ல குனமுடையவலாய்
உன்னைக்கானா சமுகம்
கைநீட்டும் உன் அன்னைக்கு
கைப்பிடித்தபின் அது
கைமாரிவிடும் உன் கணவனுக்கு

பெற்றோரையும் உற்றோரையும்
உணர்த்து
அப்பெரியோர்களை மதித்து நட
உன் பிள்ளைகளும் உருப்படியாய்
உருவாகும்
சான்ரோறாய்
போற்றும் சமுகத்தில்
நிலைகொள்ளும்