Wednesday, March 21, 2012

காதலின் வெறி

வலி பிறந்து
விழி நனைந்து
ஒலி இழந்து
ஓரமாய் சென்று
செயலிழந்து
அணுவணுவாய்
சாகும் இந்த சனியனை கூட
சுகம் என்று சொல்லுமளவுக்கு
செயலிழந்து போனதே
உந்தன் மூளை

உயிராய் இருந்த
உறவுகள் கூட
உதிர்த்துவிடும் அளவிற்கு
உலர்ந்து போனது
உன் உள்ளம்

நித்தம் சிரித்து
நிதானம் இழந்து
பித்தாய் திரியும்
பிணமாய் ஆனது
உன்னுடல்

இத்துணை மாற்றம் தந்தும்
இன்னும் நீ அந்த காதலில்
என்ன சுகம் கண்டாய்
மாறிப்போன உன்னை
மாற்றிப்பாரு புரியும்
அதன் கொலைவெறி

No comments: