Thursday, March 27, 2014

பெண்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும்



அஸ்ஸலாமு அழைக்கும் 

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான ஒரு பணிவான வேண்டுகோள் எனது இந்த பதிவை நடுநிலையாக வாசிப்பீர்கள் என்கின்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.
அண்மைகாலமாக எமது சமூகத்திலே ஒரு புதிய பழக்கம் உருவாகி வருவதை மிக மனவருத்தத்துடன் அவதானிக்க முடிகின்றது. அதாவது ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றிற்கு பெண்களையும் அலைத்துவருவதும் அவர்கள் கோஷமிட்டவாறு பாதைகளிலே ஊர்வலமாக செல்வதும் அதிகரித்து வருகின்றது.
முஸ்லிம் பெண்கள் இதுவரைகாலமும் ஆர்ப்பாட்டங்களில் இடுபடாமலே இருந்தார்கள் என்று கூறுவதற்கு இல்லை, ஆனால் சமீப காளங்களில் சில அடப அல்லது இயக்கம் வளர்க்கும் சிலரால் இது அதிகம் தூண்டப்பட்டு வருவது காணக்கூடியதாக இருக்கிறது.
பொதுவாக ஆண்களை பெண்களையும் படைத்த இறைவன் பெண்களை நிர்வஹிக்கும் பொறுப்பை ஆண்களிடம் ஒப்படைத்துல்லன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. தன்னால் நிருவஹிக்க முடியாது என்பதையும் ஆண்கள் மட்டும் ஆர்ப்பாட்டம் செய்து சாதிக்க முடியாது என்பது போலவுமே தற்போது பெண்களையும் இவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு  அழைத்துவருகின்றார்கள்.
பெண்கள் விசயத்தில் இஸ்லாம் பல வரையறைகளை விதித்திருப்பதுடன் அவர்களது அவசியம் அல்லது நிர்ப்பந்தம் என்று வருகின்ற பொது அதற்கான மாற்று நடவடிக்கைகளையும் கூரத்தவரவில்லை. ஆனால் இன்று மார்க்கம் பேசும் எம்மில் பல அறிஞ்சர்கள் அந்த மாற்று நடவடிக்கைகளையே ஆதாரமாக கட்டி எமது பெண்களை விதிக்கு இறக்குகிறார்கள் என்பதுதான் மிக கவலைக்கிடமாக உள்ளது அதற்கு ஒரு சிறந்த உதாரணங்களாக அண்மையில் நடைபெற்ற இரு நிகழ்வுகளை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

மாதம்பையில் எஸ்.எல்.டி.ஜே. புதிதாக ஆரம்பித்த ஜும்மா தொழுகைக்கு எதிராக பெண்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம். தொழுகைக்கான இடம் ஒன்றை தேவையில்லை என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடுவது எப்படியாபட்ட குற்றம் என்பதை யாவரும் அறிந்ததே இந்த ஆர்ப்பாட்டத்தை பெண்கள் செய்வதற்கான நிர்ப்பந்தம் அல்லது அவசியம் எப்படி ஏற்பட்டது கண்டிப்பாக இதனை யாராலும் நியாயப்படுத்த முடியாது. (இதன் விளைவாக இவர்களின் படங்கள் தற்போது இணையம் உட்பட அனைத்து இடங்களிலும் பரப்பப்பட்தத்துடன் பௌத்த கடும்போக்கு இயக்கங்களுக்கு இது சாதகமாகவும் அமைந்துவிட்டது)
இரண்டாவது
இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஜெனிவா பிரேரணையை எத்திக்கும் முகமாக பெண்களை வீதியிலே கோஷமிட்டவாறு ஊர்வலமாக அழைத்து செல்வதற்கான அவசியம் நிர்ப்பந்தம் எங்கிருந்து வந்தது. ஆண்கள் மாத்திரம் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தால் என்ன??? ஆண்கள் மாத்திரம் செய்திருந்தால் இது சென்றடையாது என்று ஏற்பாட்டாளர்கள் நினைகின்றார்களா?? அப்படி நினைப்பர்கலேயனால் இவர்களிடமிருந்து எமது பெண்களை பாதுகாக்கவேண்டிய மிக பெரிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. காரணம், நாளை இவர்கள் இவர்களது கருத்து சென்றடைய வேண்டும் என்பதற்காக இதைவிடவும் அடப விசயங்களுக்கும் பெண்களை முன்னிறுத்த கூடும்.
அத்துடன் இந்த ஜெனிவா பிரேரணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா??? என்பதே ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது காரணம் அரசு யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியுள்ளது என்பதே இங்கு வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது உண்மையா பொய்யா என்பது இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவருக்கேனும் உருதியாக கூறமுடியாத ஒரு விடயம்.
ஆனால் அதற்கு இவர்கள் வைக்கும் வாதம் புலிகள் இதைவிட அதிக மனித உரிமை மீறல்களிள் ஈடுபட்டர்கள் அவர்களுக்கு எதிராக ஜெனிவா (ஐநா) எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது.
ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு அங்கீகரிக்கப்படாத தடைசெய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான வித்தியாசமும் சட்ட ஒழுங்குகளையும் கூட புரிந்துகொள்ளமுடியாத இவர்கள் எப்படி மக்களை நேர்வழிப்படுத்த போகிரார்கள்
அத்துடன் இவர்களது இன்னுமொரு வாதாம் மத்திய ஆபிரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக பிரேரணை கொண்டுவராமல் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்தது தவறு என்கின்றனர் இதில் கூட இவர்களது நியாயமற்ற தன்மையை விளங்க முடிகின்றது. (மத்திய ஆபிரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக பிரேரணை கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை)
மத்திய ஆபிரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக பிரேரணை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் பரவாயில்லை ஆனால் அதற்கு பிரேரணை கொண்டுவரவில்லை என்று குற்றம் சாத்திவிட்டு இலங்கைக்கு எதிராக கொடுவந்த பிரேரணையை எதிர்க்கிறார்கள்.

ஏனவே இப்படியான அட்ப தெளிவில்லாத தவறான விடயங்களுக்கு தங்களையும் எங்கள் பெண்களையும் ஈடுபடுத்தாமல் இருப்பதற்கு முயற்சிப்போமாக
இவ்வாறான நியாயமட்டதும் தெளிவற்றதுமான கொள்கையுடைய இவர்களது பேச்சுக்களில் இருந்தது எமது சமுகத்தை எல்லாம்வல்ல இறைவன் அல்லாஹ் காத்தருள்வானாக  

வஸ்ஸலாம்  

நிசாம்  பாரூக் சவுதி அரேபியாவில் இருந்து

No comments: