கருவறையிலிருந்து
கல்லறைவரையிலே
கனவாகவே கலைகிறது
சேனைப்படை
சூழ
செவ்விதலுடையாள்
செங்கரச்சேவை
செய்ய
செழிப்பாக
வாழும்
அந்த
கனவு
கனவாகவே
கலைந்தாலும்
கவலையில்லை
ஆனால்
கனவிலும்
அது இல்லை
ஒட்டுவயிறு
விட்டு
விரிய உணவும்
ஒட்டுத்துணி
ஒதிக்கிவைக்க
உடையும்
கொட்டுமழையில்
வீட்டிலோடும்
அருவியை
ஒழித்துக்கட்ட
ஓலையும்
இல்லாமை
கனவாக
இருந்தாலும்
பரவாயில்லை
ஆனால் அதுவே
நிஜமாயுள்ளதே
நிஜத்தை
தாண்டி
நிஜமாய்
உண்டு
நிகராய்
உடுத்து
நிழலிலே
வாழ்ந்து
நிம்மதியாய்
நிலத்தையடைய
நினைத்த
கனவுகள்
கனவாய் தொடர்கிறதே
ஏழைக்கு
பிறந்த
பிள்ளையென்பதால்
பிஞ்சு
முகத்திலே
புன்னகை கூட
புனிதமான
கனவில்தான்
காட்ச்சியாகிறதே
கனவிலேனும்
மணவறையில்
மகளைக்கணும்
கனவுகூட கனவிலும்
கனவாகவே வருகிறதே
நிஜத்தின்
ஏக்கம்
நிழலாய்
கனவில் தொடரும்
என்பார்கள்
நிஜங்கள்
கூட
கனவில்
எட்டா தூரத்தில்
எதிர்மறையாய்
வந்து
உயிரை
குடிக்கிறது
கவலைபோக்க
கண்ணீரும்
கவலை
மறக்க கனவும்
கைகொடுக்குமென
கல்லறைக்காய்
காத்திருக்கின்றோம்
1 comment:
உள்ளத்து உணர்வுகளே உறக்கத்தில் பாய்கின்றது கனவுகளாய்.............!
ஏழை மகளின் கனவாகக் கூடத் தொடாத நிஜங்கள் உள்ளத்தை நனைக்கின்றது.....உங்கள் கவிதை மனதைத் தொடுகின்றது நிசாம் !
Post a Comment