Saturday, April 12, 2014

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும், மார்க்க இயக்கங்களுக்கும் எனது பணிவான ஒரு ஆலோசனை

அஸ்ஸலாமு அழைக்கும்,

கடந்த சில காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக நகர்த்தப்படும் அனைத்து சதி அல்லது அடக்குமுறைகளையும்  அவதானிக்கும் போது இவை அனைத்தும் ஒரு பலம்பொருந்திய சக்தியினால் திட்டமிடப்பட்டு செயட்படுத்தப்படுகின்றது என்பது தெட்டதெளிவாக விளங்குகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக போது பாலா செனாவினால் மேட்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களை அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் வன்மையாக கண்டித்து எதோ ஒரு முறையில் அறிக்கைகளை விட்டிருப்பது பாராட்டுக்குரியதே அனால்  இவைகள் அறிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் ஒன்றிணைந்து  மேட்கொல்லுவார்கள் என்கின்ற ஒரு எதிர்பார்ப்புடன் எமது சமுகம்  காத்திருக்கின்றது

இந்நிலையில் அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மார்க்க இயக்கங்களுக்கும் எனது பணிவான ஒரு ஆலோசனையாக  அல்லது அன்பான வேண்டுகோளாக விடுக்க விரும்புகின்றேன் 

பொதுவாக இப்படியான சூழ்நிலைகளை முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒருவர் மற்றயவர்களின் பிழைகளை குத்திக்காட்டிகொடிருக்காமல் அவர்களுடனும் பேசி ஒருங்கிணைத்து ஒரு சமுக நலனுக்காக பாடுபடும்படி வேண்டிக்கொல்வதுடன் உங்களது மேலான திட்டங்களையும் முடிவுகளையும் உடனுக்குடன் மீடியாக்களில் வழங்குவதிலும் எந்த பலனும் இல்லை என்று நினைக்கின்றேன்.

பொதுவாக அந்நிய சக்திகள் அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது மீடியாக்களில் கசிவதட்கு முன்பே   அவர்கள் அந்த நடவடிக்கைக்கான சகல ஏற்பாடுகளும் செய்து முடிந்திருப்பர்கள்.  ஆனால் எமது சமுகம் எதனையும் செய்வதற்கு முன்னமே அதாவது ஒரு எண்ணம் உதித்தாலே அதனை மீடியாக்களில் தானாகவே முன்வந்து தெரிவித்துவிடுவார்கள் இறுதியில் அந்த செயல்திட்டம் நிறைவேற்றப்பட முடியாதவாறு வேறு ஒரு பிரச்னையை முடிக்கிவிடப்பட்டிருக்கும்.

எனவே இவ்வாறான செயல்களில் சற்று நிதானமாக நடந்துகொள்வது மிக சிறந்தது என நினைகின்றேன்

நன்றி

நிசாம் பாரூக் சவுதியரேபியாவில் இருந்து,