Thursday, December 6, 2012

அமைதி பூப்பதெங்கே..?



ஹிட்லர் விட்டுவைத்த
எச்சங்களாய்
நாட்பத்தைந்தில்
நடுத்தெருவில் இருந்த
யகூதிகளே

கல்நெஞ்சம் படைத்த
சகோதர நாடுகள் பல
இருந்ததும்
உன்னை கைவிட்டார்களா
கங்கணம் கட்டியே
அனுப்பிவைத்தார்களா
பாலஸ்தீன மண்ணுக்கு

உன் வஞ்சகம் தெரியாது
நல் நெஞ்சகம் படைத்த
புண்ணியவான்கள்
புகழிடம் தந்தார்கள்
அமைதி பூத்துக்கிடந்த காசா
புதைகுழியாய் மாருமென தெரியாது

கண்முன்னே  உடன்பிறப்புக்களும்  
பச்சிளம் குழந்தைகளும் சிதரிப்போனாலும்
குண்டு மலை பொழிந்தாலும்
சுவனத்தின் வாடைதனை
நுகர்ந்தவாரே முன்நிற்கும்
ஈமானிய உறவுகள் அவர்கள்

சொந்தமன்னுக்காய் உயிர்த்துறந்து
சாஹிதேனும் பட்டத்தோடு
சுவத்தை பரிசாய் தர
ஏகஇறைவன் தேர்ந்தெடுத்த
கண்ணியவான்கள் அவர்கள்  

சொற்ப காலம் வாழும்
அற்பமான இந்த உலகை
துச்சமாக நினைத்து
அச்சமின்றி ஆயுதமுமின்றி
அமைதி பூப்பதேங்கே
என்றகின்ற ஆதங்கத்துடன்  
போராடும் வீர நெஞ்சர்கள்

தன் மரணத்தையே
கண்முன்னே கண்டும்
தப்பிக்க வழிகள் இருந்ததும்
நயவஞ்சகனாய் மாறாது
சொந்தமன்னுக்கும்
மதத்திற்கும் துரோகம்
செய்யாத உத்தமர்கள்

சிங்கமாய் இருந்தது
சிலமணி நேரத்தில்
நிரந்தர அமைதியை முத்தமிட்டு
சுவனத்தை சென்றடையும்
வெற்றியாளர்கள்

அழிவுகளுக்கு இடையே ஆறுதலாய்
ஐநாவில் அங்கீகாரம் கிடைத்தது
படுபாவிகள் உடனே புறப்பட்டனாறாம்
புதுக்குடியிருப்பு அமைத்து மேட்குக்கரையின்  
அமைதிக்கனவையும் அழித்துவிட    

அதிகாரமுடையவன்
அநியாயன்களை அரங்கேற்றுகின்ரான் 
நியாயம் பேச அமைத்த ஐநாவோ
அநியாயத்துக்கே துணையாகின்ரான் 
இந்நிலையில் அமைதி பூப்பதெங்கே

அருமைநபி சொன்னபடி
இவையெல்லாம் நிகழ்ந்தபடி
இருக்கின்ற படியால்
வாழ்ந்திடுவோம் நல்லபடி
நிரந்தர அமைதியை சுவனத்தில் எதிர்பார்த்தபடி