Friday, December 17, 2010

வெளிநாட்டு அவலம்

வாழ்வை ஒளியக்க
வானில் பறந்து வந்தோம்
தற்போது புரிகிறது ...
பிரிவின் துயரம்


இடையிடையே காதுகளுக்கு எட்டுகிறது
உறவுகளின் இறப்புகள் ......
அயலவர்களின் விபத்து ........
நண்பர்களின் திருமணம் ..........
சமுகத்தின் விழ்ச்சி .............
ஊர் திருவிழா .................
என்ன செய்ய முடிகிறது
கண்களை கசக்கியபடியே
phone ய் கையில் எடுத்தால்
என்ன கொடுமை அதிலும்
balance zero
this is our life here



பாசமிக்க பெற்றோர் .....
தோள்கொடுக்கும் உடன்பிறப்புகள் ........
தூக்கிவிட்ட நண்பர்கள்............
கொஞ்சிக்குலவுகின்ர பிஞ்சுகள் ........
ஆருதலாக இருந்த உறவுகள் ............
தட்டி விட முயற்சித்த ஊர் பெரியவர்கள் ........
இவர்களை தற்போது
கனவுகளிலே காண்கின்றோம்
நினைவுகளுடனே வாழ்கின்றோம்
காரணம் புரிகிறதா ......




வெள்ளிக்கிழமை
அது விடுமுறை அல்ல
இங்குள்ள உறவினர்கள், நண்பர்கள்
தெரிந்தவர்களுடன்
உறவாட கிடைத்த வேலை நாள்


கனவுகளை தேடி
கடல் கடந்து வந்து
வாழ்க்கையையே கனவாக்கிய
துரதிஷ்டசாலிகள் நாம்



நாட்டில் உள்ளவர்களுக்கு
நமது எல்லா கனவுகளும் நனவனதாக
எண்ணம் ...


pls call me ,
do u hv any vacancy ,
pls arrange me a visa ,..
இவை வர துடிக்கும் நெஞ்சங்களின்
sms , email
எவ்வாறு உரைப்போம்
நாம் படும் துயரை
இவர்களிடம்

இருப்பினும்
இவர்களின் email , miscal

இவைதான் உயிர்வாயு
நாம் உயிர் வாழ்வதற்கு



தாய் மண்ணுக்கு வரத்தான் துடிக்கிறோம்
முன்னாள் வந்து நிற்கிறது
நங்கள் sign வைத்த agreement
நாய் வேஷம் போட்டால்
குறைகத்தான் வேண்டுமாம்
போட்ட வேஷத்துக்காக நிற்கிறோம்
இரண்டு வருடம்


அதுவரைக்கும் தொடரும்
இந்த வெளிநாட்டு
அவலக்குரல்..............

நண்பா .................
நான் சொன்னது
சொந்தகதை அல்ல அது ...
வெளிநாடு வந்த பலரும் சொல்லும்
பொதுக்கதை
அனைவரது அவலமும்
சேர்ந்த குட்டிக்கதை